Sunday 5th of May 2024 04:19:48 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிளிநொச்சியில் 208 போத்தல் கசிப்பு மற்றும் 3000 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் 208 போத்தல் கசிப்பு மற்றும் 3000 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது!


கிளிநொச்சி, பெரிய கட்டடைக்காடு பகுதியில் 208 போத்தல் கசிப்பு, மற்றும் 3000 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைகாடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (நவ-24) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் அத்தியச்சகரின் உத்தரவிற்கமைய அன்றைய தினம் கிளிநொச்சி மது ஒழிப்பு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 208 போத்தல் கசிப்பும், 3000 லீற்றர் கோடாவும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் பொலிசாரால் மிட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE